மற்றொரு மைல் கல்.. கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி துவக்கம்!
நெல்லை: கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் இரவு மின் உற்பத்தி துவங்கியது. இதையடுத்து இன்னும் மூன்று மாதத்தில் முழு மின் உற்பத்தி துவங்கப்படும் என அணு சக்தி கழக தலைவர் ஷர்மா தெரிவித்தார்.
கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் நேற்றிரவு அணு பிளவு சோதனை நடந்தது. இது வெற்றிக்கரமாக முடிந்தது. பின்னர் நிருபர்களிடம் பேசிய அணு சக்தி கழக தலைவர் சதிஸ்குமார் சர்மா, இரண்டாவது அணு உலை அணு பிளவு சோதனை உட்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டாவது அணு உலையில் ஆயிரம் மெகா வாட் வீதம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இரண்டாவது அணு உலையில் இரவில் மின் உற்பத்தி துவங்கி விட்டது. இது அடுத்த மூன்று மாதத்தில் முழு அளவை எட்டி விடும். அதை தொடர்ந்து வாணிக ரீதியாக மின உற்பத்தி நடக்கும் என்று தெரிவித்தார். 3 மற்றும் 4 அணு உலைகள் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகி்ன்றன. ரூ.39 கோடியில் 3 மற்றும் 4வது அணு உலைகள் அமைக்கப்டுகிறது. அந்த அணு உலைகள் அமைக்கும் பணி 69 மாதங்களில் முடிவடையும்.
2022-2023ம் ஆண்டு இந்த அணு உலைகள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இநத அணு உலையில் இருந்து பெறப்படும் மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் 30 பைசாவுக்கு விற்பனை செய்யப்படும். இந்தியாவில் தற்போது அணு உலைகள் மூலம் 5780 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications