சென்னையில ஓடப்போகுது மெட்ரோ ரயிலு…
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் ஓடும் காலத்தை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே, மேம்பாலத்தில் முதல் கட்டமாக, மெட்ரோ ரயில் போக்குவரத்து விரைவில் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் நேற்று சோதனை ஓட்டம் நடத்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.20 ஆயிரம் கோடி செலவில் இருவழித் தடங்களில் 45 கி.மீ தூரத் துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது, வண்ணாரப்பேட்டையில் தொடங்கி உயர்நீதிமன்றம், அண்ணாசாலை, சைதாப்பேட்டை வழியாக விமானநிலையம் வரை 23.1 கி.மீ தூரத்துக்கு முதல் பாதையும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கி மலை வரை 22 கி.மீ தூரத் துக்கு இரண்டாவது பாதையும் அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த 2009-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன.

கோயம்பேடு – ஆலந்தூர்
இரண்டாவது பாதையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 13 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு கட்ட சோதனை ஓட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன.

சோதனை ஓட்டம்
இந்த வழித்தடத்தில், ஏழு ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு, ரயில்களின் சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கை, தெற்கு வட்டம், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதுகாப்பு ஆணையர் மிட்டல், துணை ஆணையர்கள் இருவர் என, மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் குழு, திங்கட்கிழமைன்று பெங்களூரில் இருந்து சென்னை வந்தடைந்தது.

மெட்ரோ ரயில் ஆய்வு
காலை, 10 மணிக்கு, கோயம்பேடு ரயில் நிலையத்தில் ஆய்வை துவக்கியது. முதற்கட்டமாக ரயில்கள் இயக்கம், சிக்னல் தொழில்நுட்பம் குறித்த ஆய்வு நடந்தது. பயணிகளின் சேவையில் ரயில்கள் இயக்கம் இருப்பது போன்று, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில் நின்று செல்லும் வகையில் ஆய்வு பணி நடைபெற்றது.

மூன்றுவித சோதனை
மணிக்கு, 50 முதல் 60 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. ஓட்டுனர், கட்டுப்பாட்டு அறை, தானியங்கி என, மூன்று விதங்களில் ரயில்களை இயக்கி, சோதனை நடத்தப்பட்டது.

பாதுகாப்பு அம்சங்கள்
ரயில் செல்லும் வழித்தடத்தில் ஏற்கனவே ஒரு ரயில் நிற்கும் பட்சத்தில், குறிப்பிட்ட தொலைவு இடைவெளியிலேயே ரயில் நின்று விடுவது என, ரயில்கள் இயக்கத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நேரடி ஆய்வு செய்யப்பட்டது. மதியம், 12:30 மணி வரை ஆய்வு நடந்தது.

இரண்டாம் கட்ட ஆய்வு
ரயில்கள் இயக்கம், சிக்னல் தொழில்நுட்பம் குறித்த ஆய்வு முடிந்துள்ளது. ஆய்வு அறிக்கை தயார் செய்து, ஒரு வாரத்திற்குள் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைப்போம். அவர்களிடம் இருந்து ஒப்புதல் கிடைத்ததும், இரண்டாம் கட்ட ஆய்வு நடத்துவோம். அப்போது, ரயில் நிலையங்கள், வழித்தடம் மற்றும் கட்டமைப்பு, பயணிகளுக்கான வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்று பாதுகாப்பு ஆணையர் மிட்டல் தெரிவித்துள்ளார்.

எப்போது துவங்கும்
மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: இரண்டாம் கட்ட ஆய்வு முடியும் நிலையில், அடுத்து தமிழக அரசிடம் பேச உள்ளோம். அப்போது, இயக்கத்திற்கான துவக்க தேதி இறுதி செய்யப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் ரயில் சேவையை துவக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

விபத்து காலங்களில்
ரயில் இயக்கத்தின் போது, விபத்து நிகழ்ந்தால் பயணிகளை எப்படி வெளியேற்றுவது என்பது குறித்து, பாதுகாப்பு ஆணையர் குழு ஏற்கனவே கேள்விகளை எழுப்பியிருந்தது. அது போன்ற நேரங்களில், ஓட்டுனர் வைத்திருக்கும் அவசர சாவியை கொண்டு, ரயில் பெட்டிகளை திறந்து, பயணிகளை உடனே வெளியேற்ற முடியும். வழித்தடத்தையொட்டி அமைந்துள்ள நடைபாதை வழியாக, அருகில் உள்ள ரயில் நிலையத்தை பயணிகள் அடைய முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெ.வுக்காக காத்திருப்பா?
அதேசமயம் மெட்ரோ ரயில்சேவையை தொடங்குவதில் அரசு தயக்கம் காட்டுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுதலை பெற்று மீண்டும் முதல்வரான பின்னர் அவரது கையினால் இந்த ரயில் சேவையை தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. எது எப்படியோ சென்னையில் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க மெட்ரோ ரயிலை விரைவில் இயக்கினால் சரிதான்
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications