மிதக்கும் சுடுகாடு.. தேங்கி நிற்கும் எலும்பு கூடுகள்.. பெரும் அவதியில் கிருஷ்ணகிரி கிராம மக்கள்
சுடுகாடு சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் இறந்தவர்களை புதைக்க முடியவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியின் சுற்றுவட்டார பகுதிகளில் மழைகாலங்களில் சுடுகாடுகள் தண்ணீரில் மூழ்கி விடுவதால், பிணங்களை புதைக்க குழி தோண்டும்போது, ஏற்கனவே இறந்தவர்களின் எலும்புகள், மண்டை ஓடுகள் வெளியே வருவதாக பொதுமக்கள் தங்களது அவலங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி நகரை சுற்றியுள்ள பகுதியில் இறந்தவர்களின் உடலை பழையபேட்டை, பாப்பாரப்பட்டி, மேல்சோமார்பேட்டை, தேவசமுத்திரம், திருவண்ணாமலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில்உள்ள சுடுகாட்டில்தான் புதைக்கவோ அல்லது எரிக்கவோ செய்கின்றனர்.

இந்த சுடுகாடுகள் உள்ள பகுதிகள் பெரும்பாலும் ஏரிகளின் அருகில் உள்ளதால், இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். காரணம் சடலங்களை புதைக்க ஒரு அடி குழி தோண்டினாலே தண்ணீர் வந்து விடுகிறது. இதனால் தொடர்ந்து குழி தோண்ட முடியாமல் தொழிலாளர்கள் அவதியடைவதுடன், அவ்வாறு தோண்டப்படும் குழியில் ஏற்கனவே பிணம் புதைக்கப்பட்டிருந்தால், அதில் எலும்பு கூடுகள், மண்டை ஓடுகள் தேங்கி வெளியே வருகிறது.
இவ்வாறு ஒரு புறம் இருக்க, தேவசமுத்திரம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் கிருஷ்ணகிரி நகரில் உள்ள சுமார் 10 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் உறவினர்கள் யாராவது இறந்தால், இந்த சுடுகாட்டில் தான் பிணங்களை புதைக்கின்றனர். மழை காலங்களில் இந்த சுடுகாடு தண்ணீரில் மூழ்கிவிடுவதால், இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாமல், தண்ணீரில் சிறிது அளவு மட்டுமே குழி தோண்டு, அந்த தண்ணீரிலேயே இறந்தவர்களின் உடலை புதைத்துவிட்டு செல்லும் அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த சுடுகாட்டின் அருகில்தான் பழமைவாய்ந்த காட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளது. இந்த கோயிலுக்கு சனிக்கிழமை மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு கோயிலுக்கு வருபவர்கள் இந்த சுடுகாட்டில் இருந்து வரும் துர்நாற்றத்தால் மூக்கை மூடியபடி கோயிலுக்கு சென்று வருகின்றனர்.
அத்துடன் இந்த சுடுகாடு முழுவதும் புதர் மண்டி உள்ளது. மேலும் இந்த சுடுகாடு முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால், ஆகாய தாமரை செடிகளும் அதிக அளவில் உள்ளது. இதனால் ஏராளமான விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ளது.எனவே, இந்த சுடுகாட்டிற்குள் தண்ணீர் வராமல் தடுத்து, அதற்கான கால்வாயை வெட்டி, ஏரியில் விடுவதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும். அததுடன் சுடுகாட்டை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications