மீண்டும் வர மாட்டாரா?... ஏங்குகிறது கண்கள்... கிருஷ்ணப்பிரியா உருக்கம் #Jayalalitha #Jaya
ஜெயலலிதா மீண்டும் உயிர்தெழுந்து வரமாட்டாரா என இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா உருக்கமாக பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
சென்னை : பெண்கள் போராளியாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்த ஜெயலலிதா மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து விடமாட்டாரா என்று இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
உடல்நல குறைபாடுகளால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா ஜெயலலிதா குறித்து உருக்கமான பதிவை பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார். அதில் பெண் , போராளியாகவும் இருக்கவேண்டும் என்று எமக்கு கற்றுத்தந்தவர் , மீண்டும் உயிர்த்தெழுந்து வந்துவிடமாட்டாரா என ஏங்குகிறது கண்களும், நெஞ்சமும்.... என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது பேஸ்புக் கவர் போட்டோவையும் கையால் வரையப்பட்ட ஜெயலலிதாவின் சிறு வயது புகைப்படமாக மாற்றியுள்ளார். அதில் எனது மனது முழுவதும் நீங்கள் நிறைந்து உள்ளீர்கள். இன்னொரு முறை நாம் இருவரும் சந்திப்போமா என்று எழுதியுள்ளார்.
இதேபோல் திவாகரன் மகன் ஜெயானந்தும் தனது பேஸ்புக் பக்கத்தில் ஜெயலலிதாவுக்கு கவிதாஞ்சலியை செலுத்தியுள்ளார். அதில் வானத்து தேவதையே, தரணி போற்றும் தாரகையே, மண்ணுலகையும், விண்ணுலகையும் ஆட்கொண்ட தாயே, இன்றுடன் பிரிந்து ஒரு வருடம் நிகழை பழக முயன்றாலும், மனம் ஏற்க மறுக்கிறது தாயே என்று கவிதை பதிவு செய்து ஜெயலலிதா, சசிகலா, திவாகரன், தினகரன், அவரது புகைப்படம் ஆகியவற்றை போஸ்டர் போல் போட்டுள்ளார்.