இடிந்தகரையில் அணு உலை எதிர்ப்பு போராட்ட தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு!

Subscribe to Oneindia Tamil

இடிந்தகரை: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று இடிந்தகரையில் நடைபெற்றது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் அந்தோணி ஜான், ராஜசேகர், ரோசலின், சகாயம் ஆகியோர் போலீசாரின் ஒடுக்குமுறையினால் உயிரிழந்தனர். இவர்களது 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு மணப்பாடு கிராமத்திலிருந்து அந்தோணி ஜான் சுடர், கூடங்குளத்திலிருந்து ராஜசேகர் சுடர், இடிந்தகரையிலிருந்து ரோசலின் பெண்கள் சுடர், சகாயம் இளைஞர் சுடர் ஆகியவைக் கொண்டு வரப்பட்டன.

இடிந்தகரைப் பெண்கள் குழு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் இடிந்தகரையில் அமைக்கப்பட்டு நினைவேந்தல் பந்தலில் 4 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

Kudankulam martyrs day observed

அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெஹலான் பாகவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+