மீதமுள்ள 140 வழக்குகளையும் திரும்பப் பெறக் கோரி ஜெ.விடம் கூடங்குளம் போராட்டக் குழு மனு
சென்னை: கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட 213 வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற்றிருப்பது போல மீதமுள்ள 140 வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் கூடங்குளம் போராட்டக் குழுவினர் மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயக்குமார் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில்,
இன்று காலை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள் மை.பா., முகிலன், மில்டன், கெபிஸ்டன், சுந்தர் மற்றும் நான் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களை அவரது போயஸ் கார்டன் வீட்டில் சந்திக்கச் சென்றோம். அவரது தனி உதவியாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் கலந்து பேசி எங்களை வீட்டிற்குள் அனுமதித்தனர். பின்னர் ஒரு தனி அலுவலர் வந்து எங்கள் கோரிக்கை மனுவை வாங்கிச் சென்றார்.
தமிழக அரசு 213 வழக்குளைத் திரும்பப் பெற்றிருப்பது நன்றி பாராட்டலுக்கு உரியது என்றாலும், கூடுதலான சுமார் 140 வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று கோரினோம். எங்கள் பகுதி மக்கள் வெளிநாடுகளில் வேலைக்குப் போவதற்கு பாஸ்போர்ட் தர மறுக்கிறார்கள்; எனவே அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுங்கள் என்று வலியுறுத்தினோம்.
முதலிரண்டு அணுமின் நிலையங்களும் ஓடாமல் கிடப்பதை சுட்டிக்காட்டி, அவற்றில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். கூடங்குளத்தில் மூன்றாவது, நான்காவது அணுமின் நிலையங்கள் கட்டக் கூடாது என்று ஆளும் கட்சி நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தோம்.
ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கையின் தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட ஆவன அனைத்தும் செய்ய வேண்டிக் கொண்டோம்.
ஆங்கிலத்திலான எங்கள் மனுவை பொதுச்செயலாளர் கவனத்திற்கு கொண்டு சென்று விடுவதாக உதவியாளர் உறுதியளித்தார் என்று கூறியுள்ளார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications