இந்தாங்க ரூ. 1 லட்சம் பில்.. குலசேகரம் பெண்ணுக்கு "ஷாக்" கொடுத்த மின்வாரியம்
நெல்லை: நெல்லை மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த ஒரு வீட்டுக்கு ரூ. 1 லட்சம் மின் கட்டணம் வந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு மி்ன்சார வாரியம் பயனீட்டாளர்களிடம் இருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூல் செய்கிறது. குறிப்பிட்ட நாளில் மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால் அபராதம் வசூலிப்பதோடு மின் இணைப்பையும் துண்டிக்கின்றனர்.

தற்போது பழைய மின் மீட்டர் மாற்றப்பட்டு புதிய எலக்ட்ரானிக்ஸ் மின் மீட்டர் மாற்றப்பட்டு வருகிறது. இந்த மீட்டரில் சில சமயங்களில் குளறுபடி ஏற்படுகிறது. இது போன்ற சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நெல்லை அருகே உள்ள குலசேகரத்தில் வசித்து வருபவர் கீதா.
ஆஸ்பெட்டாஸால் ஆன சிறிய வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டுக்கு கடந்த காலங்களில் 240, 320, 260 என்ற யூனிட் அளவில் மின்சாரம் செலவிடுவதாக கணக்கீடு இருந்துள்ளது. ஆனால் கடந்த 4ம் தேதி கணக்கீட்டின் போது 16290 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாகவும், அதற்கு கட்டணமாக ரூ.1 லட்சத்து 6344 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் மின் அட்டையில் கணக்கீட்டாளர் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார். இதை பார்த்த கீதா அதிர்ச்சி அடைந்தார்.
ஒரு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர், டிவி, 4 பல்புகள் கொண்ட சிறிய வீட்டுக்கு 1.06 லட்சம் மின் கட்டணமா என மின் வாரிய அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது மின் மீட்டரில் பதிவாகியுள்ள மீட்டருக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இதில் வேறு ஓன்றும் செய்ய இயலாது என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் அவர் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்.
பருப்பு விலை உயர்வை விட இதுபோன்ற பொறுப்பில்லாத செயல்கள்தான் சில நேரங்களில் மக்களைக் கோபப்பட வைக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications