தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தமிழிலேயே உரையாற்ற வேண்டும்... குமரிஆனந்தன் வலியுறுத்தல்

தமிழை பயிற்றுமொழியாக ஆக்க வலியுறுத்தியும், நாடாளுமன்றத்துக்கு செல்லும் தமிழக எம்.பி.க்கள் தமிழில் தான் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், காந்தி பேரவை, இலக்கிய பேரவை தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் குமரிஆனந்தன் பேசியதாவது:-
காமராஜர் போன்ற மாபெரும் தலைவர்கள் தமிழ்மொழி வளர்ச்சியில் மிகுந்த பங்காற்றியுள்ளனர். பாரதி போன்ற பார் போற்றும் புலவர்கள் தமிழ் மொழிக்காக பாடுபட்டதை உலகம் என்றும் மறக்காது. ஆனால், தற்போதுள்ள நிலையில் கல்வி நிறுவனங்களில் கூட தமிழை சொல்லிக்கொடுக்க மறுக்கிறார்கள். கேரளா போன்ற மாநிலங்களில் தங்களது தாய்மொழியிலேயே கல்வி கற்க வேண்டும் என்று நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் பாடம் நடத்துவதில் கல்வி நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.
எனவே தமிழ்நாட்டில், தமிழ் மொழியை கட்டாய பயிற்றுமொழியாக ஆக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் கூட ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தான் எம்.பி.க்கள் பேசுகிறார்களே தவிர தமிழில் யாரும் பேசுவது கிடையாது. எனவே, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வான எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் தமிழிலேயே உரையாற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டு இருக்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications