கும்பகோணம் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 40 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: கும்பகோணம் அருகே இன்று காலை அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 40 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறையில் இன்று காலை எதிர் எதிர் பாதையில் சென்ற அரசுப் பேருந்துகள் இரண்டு எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
காயமடைந்த பயணிகள் அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications