கும்பகோணம் பள்ளி தீ விபத்து: அரசு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கூடுதல் நிவாரணம் வழங்க அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணைய நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கும்பகோணத்தில், 2004ல் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இதில், கூடுதல் நிவாரணம் வழங்க நீதிபதி சண்முகம் தலைமையில் உயர் நீதிமன்றம் ஒரு நபர் ஆணையம் அமைத்தது.
அந்த ஒரு நபர் ஆணைய நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், ஒரு நபர் ஆணையம் நியமனம் தொடர்பாக 2 வாரத்துக்குள் தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications