குரங்கணி தீவிபத்து குறித்து 2 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல்: அதுல்ய மிஸ்ரா
Recommended Video

தேனி : தேனி மாவட்டத்தில் குரங்கணியில் சுற்றுலாப்பயணிகள் 17 பேர் காட்டுத்தீயில் சிக்கி பலியாகினர். இந்த சம்பவத்தில் இரண்டு மாதங்களுக்குள் முழு விசாரணை அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்று விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி வனப்பகுதியில் உள்ள கொழுக்குமலைக்கு சுற்றுலாப்பயணிகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மலையேற்றப் பயிற்சிக்காக வந்தனர். இவர்களின் பயணத்திற்கு தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்து அழைத்து வந்திருந்தது.

பயிற்சியை முடித்துவிட்டு திரும்பும் வேளையில் காட்டுத்தீயில் அனைவரும் சிக்கினர். இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காட்டுத்தீ எரியும் சமயத்தில் இத்தனை பேர் காட்டுக்குள் சென்றதற்கு வனத்துறையின் அலட்சியமே காரணம் என்று பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வருவாய்த்துறைச் செயலர் அதுல்ய மிஸ்ராவை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளார். முதல்கட்டமாக தேனி வந்த அதுல்ய மிஸ்ரா மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், தீ விபத்து நடந்த குரங்கணி பகுதிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், வனத்துறை அதிகாரிகள் மற்றும் தீ விபத்தில் இருந்து தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தவுள்ளதாகவும், ஏற்கனவே இறந்தவர்களின் வாக்குமூலங்களையும் கொண்டு ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக முழுமையான விசாரணை அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் தமிழக முதல்வரிடம் சமர்பிக்கப்படும் என்றும், அதைப் பொறுத்தே தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications