Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மயிலாப்பூரில் போட்டியா? மறுக்கும் குஷ்பு... தலைமை கட்டளையிட்டால் போட்டியாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் மயிலாப்பூரில் போட்டியிடப் போவதாக வெளியான செய்தி பொய்யானது என்று நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார். சீட் கேட்டு தான் விருப்பமனு அளிக்கவில்லை என்று கூறும் குஷ்பு, சோனியா காந்தியோ, ராகுல்காந்தியோ கட்டளையிட்டால் போட்டியிடுவேன் என்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு இன்று சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை சந்தித்து பேசினார். அவரது உடல் நலம் விசாரித்தார்.

kushboo condemn bjp for Shathiman horse assault

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவினர் எப்படிப்பட்டவர்கள் என்பதை உத்தரகாண்ட் மாநிலத்தில் வாயில்லாத ஜீவனான குதிரையை ஒரு எம்.எல்.ஏ. அடித்து காலை உடைத்ததை எல்லாரும் பார்த்தோம். வாயில்லாத ஜீவனையே சித்ரவதை செய்யும் இவர்கள் நாட்டு மக்களை எப்படி காப்பாற்றுவார்கள்.

மோடி அலை மோடி அலை என்கிறார்கள். அப்படி ஒரு அலை இருப்பதாக தெரியவில்லை. லோக்சபா தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவு அலை ஏற்பட்டுள்ளது. இப்போது அது சாந்தமாக உள்ளது. தேர்தலில் அது புயலாக வீசும்.

இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் பாஜக உடன் கூட்டணி அமைக்க பயந்து ஓடுகிறார்கள். தமிழ்நாட்டிலும் பாஜகவிற்கு அதே நிலைதான் உள்ளது.

பிரகாஷ் ஜவடேகர் வந்தார். எல்லாரிடமும் பேசிப் பார்த்தார். ஆனாலும் பாஜகவிற்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

நான் காங்கிரசுக்கு வந்ததும் சொன்னேன் தாம்பரத்தை தாண்டினால் பாஜகவை யாருக்கும் தெரியாது என்று அந்த கட்சி இன்றும் அதே நிலையில்தான் உள்ளது. 6 லட்சம் தொண்டர்கள் இருப்பதாக பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். ஆனால் 6 ஆயிரம் பேர் கூட ஓட்டு போடவில்லையே.

காங்கிரசை பொருத்தவரை நான் ஒரு சாதாரண தொண்டர். என்னால்தான் காங்கிரஸ் பேசப்படுகிறது என்று சொல்ல மாட்டேன்.

இப்போது காங்கிரஸ் வளர்ச்சி அடைந்துள்ளது. பேசப்படுகிறது. இதற்கு காரணம் தலைவர் இளங்கோவன்தான்.

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் எந்த தொகுதிக்கும் மனு கொடுக்கவில்லை. அப்படி இருக்கும் போது மயிலாப்பூர் தொகுதி எங்கிருந்து வந்தது? அந்த தொகுதியில் நான் போட்டியிட்டால் தோற்கடிக்கப் போவதாக எப்படி தகவல்கள் வெளியானது?

யாருமே நேரடியாக எதுவும் சொல்லவில்லை. இது பற்றி நான் ஏதாவது சொன்னால் வதந்திகளுக்கு தீனி போட்டது போல ஆகிவிடும்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும் என்றார்.

குஷ்புவின் தீவிர ஆதரவாளரான மயிலை அசோக் என்பவர் குஷ்புவின் பெயரில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்து உள்ளார். இது குஷ்புவிற்கும் தெரியும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து கருத்து கூறிய குஷ்பு, எனக்கா மனு கொடுத்து இருப்பது பற்றி அறிந்தேன். ஆனால் நான் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். மேலிடத்துக்குத்தான் எந்த தொகுதியில் யாரை நிறுத்துவது என்று தெரியும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+