ஓடும் ரயிலில் பிரசவம்- வைகை எக்ஸ்பிரசில் குழந்தை பெற்ற மதுரை பெண்!

Subscribe to Oneindia Tamil

தாம்பரம்: சென்னையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலிலே பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரையைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி நந்தினி . இவருடைய அக்கா முத்துமாரி என்பவரின் வீடு சென்னை சைதாப்பேட்டையில் உள்ளது.

கர்ப்பிணியான நந்தினி, அக்கா முத்துமாரியைப் பார்க்க சென்னை வந்தார்.

மதுரைக்கு பயணம்:

பின்னர் நந்தினி, அவரது அக்கா முத்துமாரி மற்றும் அவரது குழந்தைகள் 2 பேர் என 4 பேரும் மதுரைக்கு செல்ல வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று மதியம் எழும்பூரில் இருந்து புறப்பட்டனர்.

திடீர் பிரசவ வலி:

எழும்பூரில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு பல்லாவரம் அருகே வரும்போது நந்தினிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார்.

அழகிய ஆண்குழந்தை:

இதையடுத்து அவர் பயணம் செய்த பெட்டியில் இருந்த ஆண் பயணிகள் அனைவரும் எழுந்து சென்றுவிட, ரயிலில் இருந்த பெண் பயணிகள் நந்தினிக்கு பிரசவம் பார்த்தனர். தாம்பரம் ரயில் நிலையம் வருவதற்குள் நந்தினிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

தாயும், சேயும் நலம்:

இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையம் வந்ததும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தாயும், குழந்தையும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாமதமாக புறப்பட்ட ரயில்:

அங்கு தாயும், குழந்தையும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து அரை மணி நேரம் தாமதமாக 2.15 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+