நெல்லை ஆட்சியரை கைது செய்ய வேண்டும்... உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாணவி நந்தினி கைது!
கந்துவட்டி கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி : நெல்லையைச் சேர்ந்த இசக்கிமுத்து குடும்பத்தார் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமான ஆட்சியர், காவல்துறையினரை கைது செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நேற்று முன் தினம் இசக்கி முத்து தன்னுடைய குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். கந்துவட்டி கொடுமைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நடைபெற்ற தீக்குளிப்பு சம்பவத்தில் இசக்கியின் மனைவி மற்றும் 2 மகள்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தன்னுடைய தந்தையுடன் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். கையில் பதாகை ஏந்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்அலுவலக வாசலில் போராட்டத்திற்காக அமர்ந்தனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை என்று கூறி நந்தினியையும், அவருடைய தந்தையையும் அழைத்து சென்றனர். மாணவி நந்தினி தற்போது பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications