For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனிதாவுக்காக களத்தில் குதித்த சென்னை சட்ட மாணவர்கள்.. ஸ்தம்பித்தது பாரீஸ்!

சென்னையில் சட்ட கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்ததால் மனமுடைந்த அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அரசியல் அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் கடந்த 4 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Law college students protest in Anitha's Suicide issue

நேற்று முதல் தமிழகம் மற்றும் புதுவையில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை பாரிமுனையில் போலீஸ் தடுப்பை மீறி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாரிமுனையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

English summary
Law college students in Chennai staged protest near Kuralagam to give TN from Neet exemption.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X