ஜல்லிக்கட்டு புரட்சியை ப்ரீசெக்ஸுடன் ஒப்பிட்டு பேச்சு- ராதாராஜன் மீது கோர்ட்டில் வழக்கு
ஜல்லிக்கட்டு புரட்சியை ப்ரீ செக்ஸுடன் ஒப்பிட்டு பேசிய பீட்டா ஆதரவாளர் ராதாராஜன் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சியை ப்ரீ செக்ஸுடன் ஒப்பிட்டு கேவலப்படுத்திய விலங்குகள் நல ஆர்வலர் ராதாராஜன் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமான ஜலிக்கட்டை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர் ராதாராஜன். வரலாறு காண யுகப் புரட்சியாக ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் பல லட்சம் பேர் திரண்டனர்.

ஆனால் இந்த புரட்சியை கேவலப்படுத்தும் வகையில் ப்ரீ செக்ஸுக்காகவும்தான் 25,000 பேர் கூடுவார்கள் என பேசியிருந்தார் ராதாராஜன். அவரது இந்த பேச்சு ஒட்டுமொத்த தமிழகத்தையே கொந்தளிக்க வைத்தது.
இதையடுத்து ராதாராஜன் பகிரங்க மன்னிப்பு கோரினார். இந்த நிலையில் ராதாராஜன் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தின் நளினி, ராதாராஜன் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கேவலப்படுத்தி பேசியதாக இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications