காரைக்குடி ரசாயன ஆலையில் விபத்து: மாணவிகள் மயக்கம்- பொதுமக்கள் சாலை மறியல்
காரைக்குடி: காரைக்குடி அருகே ரசாயன ஆலையில் சாயம் சுத்திகரிக்கும் குழாயில் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக வெடித்து சிதறி உள்ளது. இதிலிருந்து வெளிப்பட்ட வாயு காரணமாக மாணவிகள் சிலர் மயக்கமடைந்தனர் இதனால் பதற்றம் உருவாகியுள்ளது.
காரைக்குடியில் கோவிலூரில் டிசிபி லிமிட்டெட் தனியார் ரசாயன ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று குழாய் திடீரென்று வெடித்துச் சிதறியது இந்த விபத்து காரணமாக ரசாயன புகை பரவியது. ஊருக்கும் புகை பரவியதால் கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

ரசாயன ஆலையை சுற்றி உள்ள சுமார் 10 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த புகை மண்டலத்தால் பாதிக்கப்பட்டனர். ஒரு சில மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விபத்து நடந்த ஆலையை உத்தரவிடும்படி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆலையையும் முற்றுகையிட்ட பொது மக்கள் அலுவலகத்தை கற்களை வீசி தாக்கினர். மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சென்னை-காரைக்குடி பஸ்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.
இந்த ரசாயன ஆலையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்த ஆலை 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அடிக்கடி விபத்து நடைபெறுவதால் ஆபத்தான நிலையில் வசித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து கூறியுள்ள காரைக்குடி எம்.எல்.ஏ, அலுவலகத்தில் மிசின் கோளாறு வருவது சகஜம்தான். ஆண்டுக்கு ஒருமுறை மிசின்களை சரிசெய்யவேண்டும் என்று கூறினார். ஆலை நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார் காரைக்குடி எம்.எல்.ஏ
மதுரை - காரைக்குடி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மதுரை செல்லும் பேருந்துகள் மானகிரி வழியாக திருப்பி விடப்படுகின்றன.












Click it and Unblock the Notifications