நாமக்கல்லில் கெளடா கட்சிக்கு ஆதரவு தந்து என்ன ஆகப் போகுது மிஸ்டர் தா.பாண்டியன்?
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் வேட்பாளர் கலைவாணனை ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
நடைபெறவுள்ள 16வது மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடக் கூடிய மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியைச் சார்ந்த வேட்பாளர் கலைவாணன் அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனி°ட் கட்சி ஆதரிப்பது என்று முடிவெடுத்துள்ளது.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பளாரை ஆதரித்து சிபிஐ மற்றும் சிபிஐ(எம்)- ன் ஊழியர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு இருவரும் தெரிவித்துள்ளனர்.