தேர்தலுக்குப் பின் ஜெ.வுக்கு ஆதரவா? எங்களுக்கு புத்தி பேதலிக்கவில்லை: சி.பி.எம். பாலபாரதி!!
Subscribe to Oneindia Tamil

தமிழ் இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பாலபாரதி எம்.எல்..ஏ. கூறியுள்ளதாவது:
தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா காங்கிரஸை விமர்சிக்கிறார். ஆனால், பாஜக-வை பற்றி எதுவுமே பேசுவதில்லை. மத்தியில் நல்லரசு அமைப்போம்' என்று ஜெயலலிதா சொல்கிறார். ஆனால், ‘16 கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இடது முன்னணியில் சேர்ந்து ஆட்சி அமைப்போம்' என்று சொல்லவில்லை. ஜெயலலிதா யாருடைய ஆட்சியில் அங்கம் வகித்து மாநில உரிமைகளை மீட்டெடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை.
தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்று சொல்வதற்கு எங்களுக்கு ஒன்றும் புத்தி பேதலித்துவிடவில்லை. எங்களைப் பொறுத்தவரை மத்தியில் பாஜக ஆதரிக்கும் எந்த அரசுக்கும் நாங்கள் ஆதரவு தரமாட்டோம்.
இவ்வாறு பாலபாரதி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications