'அம்மா'வுக்காக கோவில்களில் உருளும் அமைச்சர்கள் மக்கள் குறைகளையும் தீர்க்கட்டும்: ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவுக்காக கோவில்களில் உருண்டு புரளும் அமைச்சர்கள் மக்களின் குறைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் எம்.எல்.ஏ.வான திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தனது தொகுதிக்கு சென்றார். தொகுதி மக்களை சந்தித்து பேசி அவர்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார்.

Let the ministers solve people's problems also: MK Stalin

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மக்கள் முதல்வரான ஜெயலலிதா அம்மையார் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் கோவில்களில் பால்குடம் தூக்குகிறார்கள், உருண்டு புரள்கிறார்கள், தீமிதிக்கிறார்கள். ஜெயலலிதாவுக்காக இத்தனையும் செய்யும் அமைச்சர்கள் மக்களின் குறைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. என் தொகுதி மக்கள் அளிக்கும் மனுக்கள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+