அதிமுக அரசு குடிநீரை விற்பனை செய்வது சரியா? : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா இளைஞர் காங்கிரஸ் மாநாடு, குமரி தொகுதி மீட்பு மாநாடு ஆகியவை குழித்துறையில் நடைபெற்றது. தாலுகா தலைவர் அனிஷ் தலைமையில் நடந்த மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டினால் வழக்கு போடுகிறார்கள். என் மீது மட்டும் 2 வழக்குகள் உள்ளன. மக்கள் பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் செய்கிறார்கள். ஆனால் இந்த போக்கு நீண்ட நாள் நீடிக்காது. மக்கள் இதற்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.
சுத்தமான குடிநீரை மக்களுக்கு வழங்குவது மாநில அரசின் கடமை ஆகும். ஆனால் மாநில அரசு அந்த தண்ணீரை விற்பனை செய்வது சரியா?
அனைத்து பிரச்சனைகளிலும் பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டேன் என்று கூறி முதல்வர் தனது பொறுப்புகளை தட்டிக்கழிக்கிறார். மதுரையில் அமையவிருக்கும் ரப்பர் தொழிற்சாலையை குமரி மாவட்டத்தில் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவேன். லாலுவின் சிறைவாசத்தை பார்த்தாவது அரசியல்வாதிகள் திருந்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications