தமிழக - புதுவைத் தேர்தல்... டாஸ்மாக்குக்கு நான்கு நாட்கள் லீவ்... புதுச்சேரியிலும்தான்!
சென்னை: தமிழகம் - புதுவைக்கான சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 தினங்களே உள்ளதால், இறுதிக்கட்ட ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது.
வாக்குப்பதிவை அமைதியாக நடத்த தேர்தல் கமிஷன் முழு அளவில் ஏற்பாடுகளை செய்துள்ளது.
தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், நான், தேர்தல் டி.ஜி.பி., மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆணையாளர், வருமான வரித்துறை இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேர்தலையொட்டி வருகிற 14, 15, 16 மற்றும் 19-ந் தேதிகளில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும். இது தவிர அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடப்பதால் அங்கும் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்.
ஆனால் ஆந்திரா, கர்நாடகம் ஆகிய பக்கத்து மாநிலங்களின் எல்லையோரங்களில் உள்ள மதுபான கடைகளை அடைக்க அந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. அந்த 4 நாட்களும் ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து ரவுடிகள் நடமாட்டம் இருக்கிறதா? என்று தீவிரமாக கண்காணிக்கப்படும். சோதனை சாவடிகள் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும்.
புதுவையிலும் நோ சரக்கு!
புதுச்சேரியில் மதுவகைகள் விலை குறைவாக இருக்கும் என்பதால் அங்கிருந்து தமிழகத்துக்கு கடத்தி கொண்டு வந்து விடாமல் இருக்க தீவிர கண்காப்பில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கள் தமிழகத்துக்கு கடத்தி வராமல் இருக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications