அழகு ராதைகளுடன் அமர்க்கள கிருஷ்ணாக்கள்.. சென்னை பள்ளியில் கோலாகல கிருஷ்ணஜெயந்தி!
சென்னை: சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த ராதைகளுடன் சூப்பராக போஸ் கொடுத்துள்ள குட்டி கிருஷ்ணாக்கள்.
முகப்பேர் மேற்கில் பிரெட்டி டால்ஸ் (Pretty Dolls) நர்சரி மற்றும் பிரைமரி வகுப்பு வரை உள்ள சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அப்போது அந்த விழாக்கள் எதற்காக கொண்டாடப்படுகின்றன என்பது குறித்து ஆசிரியைகள் விளக்குகின்றனர்.
இந்நிலையில் நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை இப்பள்ளி வெள்ளிக்கிழமையே கொண்டாடியது.

பள்ளி வளாகத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பழங்கள், மாணவர்கள் கொண்டு வந்த பலகாரங்கள் ஆகியவை கொண்டு படைக்கப்பட்டது.
பின்னர் பள்ளி ஆடிட்டோரியத்தில் ராதைகளுடன் கிருஷ்ணாக்கள் குரூப் புகைப்படம் எடுத்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications