உள்ளாட்சி இடைத்தேர்தல்: நேர்மையாக நடைபெற்றது: சோ. ஐய்யர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கோவை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் காலையில் படு மந்தமாக நடைபெற்றது. பின்னர் பிற்பகலில் விறுவிறுப்படைந்தது.

இடைத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியான முறையிலும் நடைபெற்றதாக மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தெரிவித்துள்ளார்.

மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் சென்னை கொடுங்கையூரில் 35வது வார்டில் நடைபெற்ற வாக்குப்பதிவை இன்று காலை பார்வையிட்டார்.

அமைதியான வாக்குப்பதிவு

அமைதியான வாக்குப்பதிவு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி இடைத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற்றது என்றார்.

புகார் இல்லை

புகார் இல்லை

உள்ளாட்சித் தேர்தலில் எந்த புகாரும் வரவில்லை என்று கூறிய அய்யர், எழுத்துப்பூர்வமாக புகார் அளி்த்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தூத்துக்குடியில் வாக்குப்பதிவு

தூத்துக்குடியில் வாக்குப்பதிவு

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 5மணி நிலவரப்படி 61 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கோவையில் வாக்குப்பதிவு

கோவையில் வாக்குப்பதிவு

கோவையைப் பொறுத்தவரையில், மாநகராட்சி பகுதிகளில் மாலை 4.30 மணி நிலவரப்படி 50 சதவீதமும், புறநகர்ப்பகுதியில் 55 சதவிகித வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+