நாடாளுமன்றத் தேர்தல்: போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் விஜயகாந்த் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Lok Sabha election: DMDK men can file petition from jan. 23- Vijayakanth
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 23ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவும் களத்தில் உள்ளது. ஆனால் இந்த தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்பது இதுவரை தெரியவில்லை. அவரை தங்கள் கூட்டணியில் சேர்க்க முன்னணி கட்சிகள் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் குறித்து விஜயகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர் வரும் 23ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம். விருப்ப மனுக்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கிடைக்கும். பொது தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.20 ஆயிரமும், தனித் தொகுதியில் போட்டியிட ஆசைப்படுபவர்கள் ரூ.10 ஆயிரமும் கட்டணமாக செலுத்தி மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+