நாடாளுமன்றத் தேர்தல்: திருச்சி அல்லது ஸ்ரீபெரும்புதூரில் ஜெயலலிதா போட்டி?

தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பது அதிமுகவின் கணக்கு. இதற்கான தேர்தல் பணிகளில் அதிமுகவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் நெருங்க, நெருங்க, இந்திய பிரதமர் வாழ்க என்ற கோஷம்தான் ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களில் அதிகமாக எதிரொலிக்கிறது. அதிமுகவில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கானோர் ஜெயலலிதா தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று பணம் கட்டி இருந்தனர்.
இதில் திருச்சி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குத்தான் அதிக அளவில் ஜெயலலிதாவுக்காக பணம் கட்டியிருக்கிறார்களாம். இதனால் நிச்சயமாக ஜெயலலிதா, லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என்றே அதிமுக தொண்டர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் லோக்சபா தேர்தலுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும் அதிக இடங்களைப் பெற்று பிரதமராகும் வாய்ப்பு இருந்தால் அதன் பின்னரே தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஜெயலலிதா யோசிப்பார் என்றும் ஒருதரப்பு அதிமுகவினர் கூறுகின்றனர்.
ஆக அதிமுகவைப் பொறுத்தவரையில் லோக்சபா தேர்தல் கவுரவ பிரச்சனைதான்!












Click it and Unblock the Notifications