தூத்துக்குடி மோட்டார் சைக்கிள் விபத்து- பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
தூத்துக்குடி: தூத்துக்குடி மோட்டார் சைக்கிள் - மணல் லாரி விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு குழந்தையும் இறந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர், அண்ணாநகர் கால னியை சேர்ந்த சின்னதுரை மகன் சந்திரசேகர், உப்பளத் தொழிலாளி. இவரது மகள்கள் முத்துப்பிரியா , அனுசியா, மகன் குமார் ஆகியோர் குளத்தூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.
கிழக்கு கடற்கரை சாலை யில் அண்ணாநகர் காலனி அருகே சென்றபோது ஹேண்ட் பாரில் புத்தகப்பைகள் சிக்கிக் கொண்டதால், மோட்டார் சைக்கிளை திருப்ப முடியவில்லை. அப்போது எதிரே பூசனூரில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
இவ்விபத்தில் சந்திரசேகர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மாணவ, மாணவியர் 5 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்லும் வழியில் முத்துப்பிரியா, குமார், மாதேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த அனுசியா, லதா ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அனுசியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காரணத்தினால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.