போக்குவரத்து துறையில் லஞ்சம்: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் போர்க்கொடி
சென்னை: லாரி உரிமையாளர்களிடம் லஞ்சம் பெறும் போக்குவரத்து துறையை கண்டித்தும், போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனே நீக்கக் கோரியும் லாரி உரிமையாளர்கள் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல தீர்மானித்துள்ளனர்.
போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள் செந்தில் பாலாஜியின் வீடு முன்பு போராட்டமும் நடத்தினர்.

இந்நிலையில் இது குறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில்,
லாரிகளில் அளவுக்கு அதிகமாக பளு ஏற்றுவது நிறுத்தப்பட வேண்டும். அரசு சார்பில் லாரிகளில் அதிக பளு ஏற்ற தூண்டுகிறார்கள். பின்னர் அளவுக்கு அதிகமாக பளு ஏற்றப்பட்டுள்ளது என்று கூறி லாரிகளை மடக்கி பணம் வசூலிக்கிறார்கள். லாரி ஒன்றுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வசூல் செய்கிறார்கள். அந்த பணத்தை அளித்தால் லாரிகளில் எவ்வளவு பாரம் ஏற்றிக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என்கிறார்கள்.
சாலை விபத்துகளை தடுக்கும் விதத்தில் வாகனங்களில் அதிக பளு ஏற்றக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி அதிக பளு ஏற்றுவதற்கு எதிரான சட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஆனால் அரசு அதிகாரிகளே அந்த சட்டத்தை மீறுகிறார்கள்.
அதிக பளு ஏற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் லாரிகளை மடக்கி லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தியும், எங்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாத அமைச்சர் செந்தில் பாலாஜியை மாற்ற வலியுறுத்தியும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல உள்ளோம் என்றனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications