”ஏப்ரல் 1 முதல் கேரளாவுக்கு லாரிகள் ஓடாது” – கோரிக்கைகளை முன்வைத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஏப்ரல் 1 முதல் கேரளாவுக்கு லாரிகளை இயக்கப்போவதில்லை என்று தமிழக-கேரளா லாரி உரிமையாளர் முடிவு செய்துள்ளனர்.
தமிழக-கேரள எல்லையிலுள்ள வாளையாறு வணிகவரித்துறை சோதனைச் சாவடியில் போதிய அளவு ஆட்கள் இல்லாததாலும், நவீன கருவிகள் இல்லாததாலும், அந்த வழியாக கேரளாவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் பலமணி நேரம் நின்று செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக இதுபோல பலமணி நேரம் நின்று தான் சோதனைச் சாவடியை கடந்து செல்கின்றனர். இதை தவிர்க்கும் வகையில், நவீன முறையில் சோதனை சாவடிகளை அமைக்கவேண்டும் என அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அமைப்பின் சார்பாக கேரளா அரசுக்கு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு லாரி உரிமையாளர்களுடன், முன்பு பேச்சு நடத்திய கேரள அரசு, பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில், வாளையார் சோதனைச்சாவடியில் விரைவில் மேலும் ஒரு வரிசை பூத் ஏற்படுத்தப்படும்.
ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகளில் ஸ்கேனிங் இயந்திரம் அமைக்கப்படும், லாரிகளை நிறுத்தவும், ஓட்டுனர்களுக்கு தங்குமிடம் கழிப்பறை, குளியலறை வசதிகள் ஏற்ப்படுத்த 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும், சரக்கு கிடங்கும் ஏற்படுத்தப்படும். தேவையற்ற காலதாமதம் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ், தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை-கேரளா லாரி உரிமையாளர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அதில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், திட்டமிட்டபடி கேரள மாநிலத்துக்கு லாரிகளை இயக்குவதில்லை என முடிவு செய்துள்ளோம். திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications