”ஏப்ரல் 1 முதல் கேரளாவுக்கு லாரிகள் ஓடாது” – கோரிக்கைகளை முன்வைத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஏப்ரல் 1 முதல் கேரளாவுக்கு லாரிகளை இயக்கப்போவதில்லை என்று தமிழக-கேரளா லாரி உரிமையாளர் முடிவு செய்துள்ளனர்.
தமிழக-கேரள எல்லையிலுள்ள வாளையாறு வணிகவரித்துறை சோதனைச் சாவடியில் போதிய அளவு ஆட்கள் இல்லாததாலும், நவீன கருவிகள் இல்லாததாலும், அந்த வழியாக கேரளாவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் பலமணி நேரம் நின்று செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக இதுபோல பலமணி நேரம் நின்று தான் சோதனைச் சாவடியை கடந்து செல்கின்றனர். இதை தவிர்க்கும் வகையில், நவீன முறையில் சோதனை சாவடிகளை அமைக்கவேண்டும் என அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அமைப்பின் சார்பாக கேரளா அரசுக்கு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு லாரி உரிமையாளர்களுடன், முன்பு பேச்சு நடத்திய கேரள அரசு, பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில், வாளையார் சோதனைச்சாவடியில் விரைவில் மேலும் ஒரு வரிசை பூத் ஏற்படுத்தப்படும்.
ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகளில் ஸ்கேனிங் இயந்திரம் அமைக்கப்படும், லாரிகளை நிறுத்தவும், ஓட்டுனர்களுக்கு தங்குமிடம் கழிப்பறை, குளியலறை வசதிகள் ஏற்ப்படுத்த 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும், சரக்கு கிடங்கும் ஏற்படுத்தப்படும். தேவையற்ற காலதாமதம் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ், தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை-கேரளா லாரி உரிமையாளர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அதில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், திட்டமிட்டபடி கேரள மாநிலத்துக்கு லாரிகளை இயக்குவதில்லை என முடிவு செய்துள்ளோம். திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications