10 நாட்களாக நடைபெற்ற லாரி ஸ்டிரைக் வாபஸ்… ஹைதராபாத் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாட்களாக நடைபெற்று வந்த லாரி ஸ்டிரைக் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்று பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து லாரிகள் இனி ஓடும் என அ
சென்னை: வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை உயர்வு, பெட்ரோல், டீசலுக்கான வாட் வரி உயர்வு போன்ற லாரி உரிமையாளர்களை பாதிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நடவடிக்கைகளை கண்டித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த மாதம் 30-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் வடமாநிலங்களில் இருந்து உணவு பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்துக்கு வருவது தடைபட்டது. அதேபோல் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பொருட்களும் தேங்கி கிடக்கின்றன.

இந்நிலையில், ஹைதராபாத்தில் லாரிகளின் காப்பீட்டு கட்டணம் தொடர்பாக மத்திய அரசுடன், லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து 3ம் கட்டப் பேச்சுவார்த்தையை இன்று நடத்தியது. அதில் சுமூக முடிவு எட்டப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்பட்டதாகவும், இன்சூரன்ஸ் 23 சதவீதம் வரை குறைந்துள்ளது என்றும் இதனால் சுமார் 10 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் கிடைக்கும் என்று லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே, இந்தப் போராட்டம் இன்றுடன் முடிவிற்கு வந்துள்ளது என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
தொடர்ந்து 10 நாட்களாக ஓடாமல் கிடந்த லாரிகள், வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் என்று சொன்ன அடுத்த கணத்தில் இருந்து இயங்கும் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து காய்கறி, பழங்கள் விலை இனி குறையும் என்று எதிர்ப்பார்க்கலாம்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications