அக்கா-தம்பி உறவுமுறைக்குள் காதல்... சென்னை கமிஷனர் ஆபிஸ் முன்பு காதலர்கள் மீது தாக்குதல்!
சென்னை: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சரணடைய வந்த காதலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேரை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி ஜெனிபர் (26). ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ள ஜெனிபர், அடுத்தகட்ட தேர்வுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், ஜெனிபருக்கும் ராயபுரத்தைச் சேர்ந்த சாமுவேல் (24) என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களான இருவரும் ரகசிய திருமணமும் செய்து கொண்டனர். கடந்த வாரம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஜெனிபரின் பெற்றோர் தங்கள் மகள் கடத்தப்பட்டுவிட்டதாக சென்னை நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று பகல் 11 மணியளவில் ஜெனிபரும், சாமுவேலும் பாதுகாப்புக் கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். இது குறித்து முன்னரே தகவல் அறிந்த ஜெனிபரின் உறவினர்கள் கமிஷனர் அலுவலக வாசலிலேயே காத்திருந்தனர்.
பின்னர், அவர்கள் ஜெனிபர் மீதும், சாமுவேல் மீதும் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில், காயமடைந்த சாமுவேல், கமிஷனர் அலுவலகத்துக்குள் தப்பி ஓடினார். பின்னர் ஜெனிபரை ஒரு ஆட்டோவில் ஏற்றி அக்கும்பல் கடத்திச் செல்ல முற்பட்டது. விரைந்து வந்த போலீசார் ஜெனிபரைக் காப்பாற்றினார்கள்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் வேப்பேரி உதவி கமிஷனர் அய்யப்பன், இன்பெக்டர் பிரபு ஆகியோர் போலீஸ் படையுடன் விரைந்து வந்தனர். பின்னர் சாமுவேல், ஜெனிபர் மற்றும் அவரது உறவினர்கள் வேப்பேரி போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு போலீசாரிடம் ஜெனிபரின் உறவினர்கள் கூறுகையில், "ஜெனிபர், சாமுவேலைவிட வயதில் மூத்தவர். இருவரும் அக்கா-தம்பி உறவுமுறை கொண்டவர்கள். எனவேதான் இந்த காதலையும், அவர்களின் திருமணத்தையும் எதிர்க்கிறோம்" என்றனர்.
ஆனால், ஜெனிபரும், சாமுவேலும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர். இதனால் வேப்பேரி போலீசார் ஜெனிபரையும், சாமுவேலையும் பாதுகாப்பாடு நொளம்பூர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரச்சினையை தீர்த்துக்கொள்ளும்படி ஜெனிபரின் உறவினர்களும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
சினிமாவில் வருவது போன்ற இந்த அடிதடி சம்பவத்தால் போலீஸ் கமிஷனர் அலுவலகம் நேற்று பகல் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
-
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
தேனியில் கள்ளக்காதல்.. கணவனுக்கு தினமும் உணவில் பாயாசம் போட்ட பாத்திமாவுக்கு.. சரியான பாடம் -
விருதுநகரில் உல்லாசமாக இருந்த பெண்ணிடமே ரூ.80 லட்சம்.. சமார்த்திய போலீஸ் ஏட்டுக்கு ட்விஸ்ட் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications