நாகையில் தூக்கில் தொங்கிய காதலர்கள்- ஜாதி ஆணவக் கொலையா? பொதுமக்கள் சந்தேகம்
நாகை: நாகை மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு வலுத்ததால் காதலர்கள் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தினை உண்டாக்கியுள்ளது
பொறையார் அருகே உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஓலக்குடியை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் சரண்யா. அதே ஊரைச் சேர்ந்த நாகப்பனின் மகன் குருமூர்த்தி.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நான்கு நாட்களாக ஊரைவிட்டு ஓடிவிட்டதாக செய்தி பரவியது. இதனையடுத்த் சரண்யாவின் தந்தை தனது மகளை காணவில்லை என பொறையார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஆத்துப்பாக்கம் என்கிற கிராமத்தில் அமைந்துள்ள கருவக்காட்டில் இருவரும் தூக்கில் தொங்கிக்கொடிருப்பதை அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். போலீசார் அவர்களுடைய உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் இது தற்கொலையல்ல. உடலில் ஆசிட் ஊற்றி, இருவரது காலும் தரையில தொங்கும்படி கட்டியுள்ளனர். கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்று சந்தேகம் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications