தென்மேற்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
தென்மேற்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தென்மேற்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு பக்கம் கோடை வெயில் கொளுத்தினாலும் மறுபக்கம் கோடை மழையும் கொட்டி வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மண்டலமாக மாற உள்ளதால் அடுத்த 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக பழனியில் 4 சென்டி மீட்டர் மழையும் உடுமலைப்பேட்டையில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications