அடடே.. அடிக்கிற வெயிலுக்கு நடுவே குமரி கடற்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை!
Recommended Video

சென்னை: கன்னியாகுமரி கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் கோடைக்காலம் தொடங்குவதற்குள்ளேயே பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.

புழுக்கம்
காலை நேரங்களில் பனி மூட்டம் நிலவி வந்த நிலையில் தற்போது அதுவும் குறைந்துள்ளது. இதனால் இரவு மற்றும் பகல் நேரங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் புழுக்கமாகவே உணரப்படுகிறது.

குறைந்த காற்றழுத்தம்
இந்நிலையில் கன்னியாகுமரி கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மன்னார் வளைகுடாவில் அடுத்த 2 நாட்களுக்கு கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடலில் 35 முதல் 55 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடலுக்கு செல்லவில்லை
கடலோர மாவட்ட ஆட்சியர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை ஆணையர் சத்யகோபால் கேட்டுக்கொண்டுள்ளார். வானிலை மையம் மற்றும் தமிழக அரசின் எச்சரிக்கையால் கன்னியாகுமரி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications