தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
சென்னை: வங்கக்கடலில் குறைந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யுக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவில் வலுவடைந்துள்ளது. மேலும் வடமேற்கு வங்கக் கடல் முதல், மத்திய மேற்கு வங்கக் கடல் வரை குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிக்கிறது. எனவே அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில், குறிப்பாக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை இளையான்குடியில் 10 செ.மீ. மழையும், வாணியம்பாடி அருகே ஆலங்காயத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை மிதமான மழை பெய்யக் கூடும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications