இடி இடிக்குது.. மழை கொட்டுது.. காணாமல் போன கத்திரி... புதுக்கோட்டையில் 2 பேர் பலி!
சென்னை: கொளுத்தும் கோடைக்கு இதமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை கொட்டி வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் மறைந்து குளுமை பரவியுள்ளது. புதுக்கோட்டை அருகே இடியோடு பெய்த கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
குமரிக்கடல் பகுதியில் மேலடுக்கில் சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கோடை வெயில் வறுத்தெடுத்த நிலையில் சில மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அரைமணி நேரமாக கன மழை கொட்டியது. அபிராமம், பேரையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வெப்பம் மறைந்து குளிர்ந்த காற்று வீசுகிறது.
சென்னையில் நேற்று காலையில் சாரல் மழை பெய்த நிலையில் பிற்பகலில் மிதமான வெயிலோடு குளிர் காற்று வீசியது. இன்று காலை முதலே வெயில் அடித்த நிலையில் திடீரென கனமழை கொட்டியது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். எனினும் கோடை வெயிலுக்கு பெய்த மழை இதமாக இருப்பதாக கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications