லோக்சபா தேர்தல்- பிப்ரவரி 9ம் தேதி முதல் தேமுதிக வேட்பாளர்கள் நேர்காணல்

தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் தே.மு.தி.க. வினருக்கு கடந்த மாதம் 23-ந் தேதி முதல் விருப்ப மனு கொடுக்கப்பட்டது.
பொதுத் தொகுதிக்கு ரூ.20 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்தப்பட்டது. இந்த விருப்ப மனு கொடுக்க கடைசி தேதி தேதி பிப்ரவரி 1-ந் தேதி என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 9-ந் தேதி வரை விருப்ப மனு கொடுக்கலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வரும் 2014 பாராளுமன்ற தேர்தலுக்காக தங்கள் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் 9.2.2014 முதல் 12.2.2014 வரை காலை 10 மணியளவில் விஜயகாந்த் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.
எனவே விருப்ப மனு கொடுத்தவர்கள் தங்கள் தொகுதிக்கான தேதியில் நேரில் வர வேண்டும். வரும்பொழுது கட்சி உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்வி சான்றிதழ், தனித் தொகுதிக்கு ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
கீழ்க்கண்ட தேதி மற்றும் தொகுதி வாரியாக நேர்காணல் நடைபெறும்.
பிப்ரவரி 9-ந் தேதி: தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிதம்பரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை
பிப்ரவரி 10-ந் தேதி: நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர்,சேலம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர்
பிப்ரவரி 11-ந் தேதி: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை
பிப்ரவரி 12-ந் தேதி: வேலூர், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, புதுச்சேரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications