நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் ஜெயலலிதா: அதிமுகவினர் 19ம் தேதி விருப்ப மனு அளிக்கலாம்!

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள் தலைமைக் கழகத்தில் வருகிற 19.12.2013 வியாழக்கிழமை முதல் 27.12.2013 வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
ரூ 25 ஆயிரம் கட்டணம்
இதனிடையே அ.தி. மு.க. பொருளாளரும், அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கு இணங்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள் தலைமைக் கழகத்தில் வருகிற 19.12.2013 முதல் 27.12.2013 வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை விண்ணப்பக் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி வேட்புமனு மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications