பெருங்குடியில் ஆம் ஆத்மி தேர்தல் பிரசார அலுவலக வாடகை ரூ.9 மட்டுமே
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி அலுவலக கட்டிடத்தின் வாடகை வெறும் 9 ரூபாய் தான்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருங்குடி, ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து தேர்தல் பிரசார அலுவலகம் ஆக்கியுள்ளனர்.
இந்த புதிய அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தேசப் பிதா காந்தியடிகளிடம் உதவியாளராக இருந்த கல்யாணம்(93) என்பவர் அலுவலகத்தை திறந்து வைத்தார். நகரின் முக்கிய சாலையில் அலுவலகத்தை திறந்துள்ளார்களே அந்த கட்டிடத்திற்கு எவ்வளவு வாடகை அளிக்கிறார்கள் என்றும் பலரும் வியக்க அந்த விவரத்தை தெரிவிக்க ஆம் ஆத்மி கட்சியினர் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் லெனின், பொருளாளர் ஆனந்த் கூறுகையில்,
அலுவலக கட்டிடத்தின் வாடகை மாதம் ரூ.9 தான். தேர்தலுக்காக ஒருவர் கட்சிக்கு நன்கொடையாக கொடுத்தார் என்றார்.












Click it and Unblock the Notifications