ஸ்ரீரங்கம் வரும் மு.க.ஸ்டாலின்.. நாளை முதல் 3 நாட்கள் பிரசாரம்
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் நாளை தொடங்குகிறது. 3 நாட்களுக்கு ஸ்டாலின் பிரசாரம் செய்யவுள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் என். ஆனந்த் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவருக்காக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான குழு தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆனந்த்துக்கு வாக்கு சேகரிக்க 3 நாள் பிரசாரத்தில் குதிக்கிறார்.

நாளை தனது பிரசாரத்தை அவர் தொடங்குகிறார். கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் மேற்கொள்கிறார் ஸ்டாலின்.
நாளை 9ம் தேதி மாலை 4.15 மணிக்கு சோமரசம்பேட்டையில் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து அதவத்தூர் மெயின்ரோடு, அல்லித்துறை அண்ணாசிலை, தீரன்நகர், புங்கனூர், ராம்ஜிநகர், மில்கேட், கள்ளிக்குடி, சோழன்நகர், நவலூர்குட்டப்பட்டு, சத்திரப்பட்டி, இனாம் குளத்தூர், ஆலம்பட்டி புதூர், மணப்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட சித்தாநத்தம், வடக்கு சேர்பட்டி, கொட்டப்பட்டி, கரும்பிலிப்பட்டி, கொத்த மேட்டுபட்டி, முத்தப்புடையான்பட்டி, சமுத்திரம், மறவனூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்யும் அவர் இரவு 10 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இன்று அன்பழகன் பேச்சு
இதற்கிடையே திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் திருச்சி வந்துள்ளார். பெட்டவாய்த்தலையில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் அவர் பின்னர் ஸ்ரீரங்கத்தில் இரவு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்து பேசுகிறார்.












Click it and Unblock the Notifications