மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் ஆடக்கூடிய பொம்மை அல்ல திமுக.. ஸ்டாலின் ஆவேசம்
மத்திய அரசின் சொல்வதற்கெல்லாம் கேட்டு ஆடக்கூடிய பொம்மையல்ல திமுக என்று அந்தக் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவத்துள்ளார்.
சென்னை : மத்திய அரசின் கூறும் அனைத்தையும் கேட்டு செயல்படும் கட்சியல்ல திமுக என்று செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவர் வைரவிழாவில் பேசியதாவது, "மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் ஆடக்கூடிய பொம்மைகளல்ல திமுக. கள்ளிக்காட்டை அழிப்பது கள்ளிக்காடு மீதான கோபத்தால் அல்ல, அங்கே ஒரு நந்தவனத்தை உருவாக்குவதுதான் நோக்கம். ஆட்சி பெரிதல்ல 1972ம் ஆண்டு ஆட்சியை நாங்கள் பெரிதாக நினைக்கவில்லையே, அப்படி நெருக்கடி காலத்தில் கருணாநிதி நினைத்திருந்தால் ஆட்சியை தக்க வைத்திருக்கலாமே.

இலங்கைத் தமிழர் விவகாரத்தால் ஆட்சி பறிபோனதற்கும் கருணாநிதி கவலைப்படவில்லை. பாஜக பெரும்பான்மை பெற்றிருக்கலாம் அதற்காக எதிர்க்கட்சிகளை அழிக்க காய் நகர்த்திக் கொண்டிருக்கலாம். நாட்டை காவிமயமாக்க எல்லா முயற்சிகளும் நடைபெறுகிறது, இதனை மறந்து விடக்கூடாது.இந்த சூழலில் கூடியிருக்கும் நாம் மதச்சார்பற்ற அரசை உருவாக்க வேண்டும்.
மொழியை திணக்கக் கூடாது, தனிப்பட்ட மறையில் எதிர்க்கவில்லை. இந்தியை எதிர்ப்பவராக இருந்திருந்தால் பிஹார் முதல்வர் உள்ளிட்ட இந்தி பேசும் தலைவர்களை அழைத்திருக்க மாட்டோம். ஆதிக்க மொழியை திணிக்கக் கூடாது என்றே எதிர்க்கிறோம். மாட்டிறைச்சிக்கு தடை போட்டு களேபரம் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications