அறவழியில் போராடியவர்களை தாக்கியது ஏன்.. போலீஸ் தாக்குதல் குறித்து சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி
அறவழியில் போராடியவர்கள் மீது போலீசார் ஏன் தாக்குதல் நடத்தினார்கள் என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் பதில் தர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு வேண்டும் என்று அறவழியில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது ஏன் போலீசார் தாக்குதல் நடத்தினார்கள் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
ஒரு வார காலமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரை, அலங்காநல்லூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், மாணவிகள், இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இந்த வன்முறைக்கு தமிழகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின், போராட்டக்காரர்கள் மீது போலீசார் அத்துமீறி நடந்து கொண்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், அறவழியில் போராடியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கான பின்னணி என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதில் அளிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்த ஸ்டாலின், ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் சட்டத்திற்காக டெல்லி சென்று நடவடிக்கை எடுத்த முதல்வர் ஓபிஎஸ்சுக்கு நன்றி தெரிவித்தார்.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications