மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்க மு.க. ஸ்டாலின் கோரிக்கை
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகளில் பணி புரிந்தவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ள
சென்னை: மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வந்த ஊழியர்களுக்கு தவறாமல் மாற்றுப் பணியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் பெரிதும் வரவேற்கிறேன். உச்சநீதிமன்றம் 5.12.2016 மற்றும் 31.3.2017 அன்று அளித்த தீர்ப்புகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு உடனடியாக முழுமனதுடன் நிறைவேற்ற முன் வருவதுதான் மாநில நலனுக்கும், மக்கள் நலனுக்கும் நன்மைபயக்கக் கூடியது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கழகம் ஆட்சியில் இருந்த 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் பொதுநலன் கருதி பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கையை ஏற்று 1300 மதுக்கூடங்கள் (பார்கள்) மற்றும் 128 சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்பட்டதை இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

வரலாற்று சிறப்பு
அதே போல் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் 22.12.2008 அன்று முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டதைத் தொடர்ந்து "1.1.2009 முதல் புதிய மதுக்கடைகள் எதையும் திறப்பதில்லை" என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவினை அறிவித்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அது மட்டுமின்றி, காலை 10 மணியிலிருந்து இரவு 11 மணி வரை இருந்த மதுக்கடை விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என்று ஒரு மணி நேரம் விற்பனையை குறைத்து ஆணையிட்டதும் கழக ஆட்சிதான்.

பூரண மதுவிலக்கு
மதுக்கடைகளை மூடுவதற்கும், புதிய மதுக்கடைகள் திறக்கப்படமாட்டா என்றும் முதற்கட்டமாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது திராவிட முன்னேற்றக் கழகம். "பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம்" என்று மக்கள் மன்றத்தில் தேர்தல் வாக்குறுதியளித்து சென்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது திராவிட முன்னேற்றக் கழகம்.

படிப்படியாக மதுவிலக்கு
"படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம்" என்று அரை மனதோடு வாக்குறுதி அளித்த அதிமுக அரசு இப்போது பெயரளவிற்கு வருமானம் இல்லாத மதுக்கடைகளை மட்டும் - அதுவும் ஒரு சில கடைகளை மட்டும் மூடி கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி அனைவரையும் ஏமாற்றிட எத்தனித்துக் கொண்டிருப்பதை நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நெடுஞ்சாலை மதுக்கடை
அதே போல், தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரையே வைத்து வாதாடியதும் இதே அதிமுக அரசுதான் என்பதையும் மக்கள் இப்போது நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
இந்நிலையில், சாலை விபத்துகள், சட்டம்-ஒழுங்கு, தாய்மார்களின் நலன் உள்ளிட்டவற்றை மனதில் வைத்து "தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்" என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக அரசு மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும், அப்படி கடைகள் மூடப்படுவதால் அங்கு உள்ள பணியாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு உரிய பணி வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

மீண்டும் கூடாது
உச்சநீதிமன்ற தீர்ப்பின் நோக்கத்தை சீர்குலைத்திடும் எண்ணத்தில் மூடிய கடைகளுக்குப் பதிலாக பக்கத்திலோ அல்லது உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள 500 மீட்டர் தூரத்திற்குள்ளோ மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பணி வழங்க…
ஒருசில இடங்களில் இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப் பட்டு, பின்னர் பொதுமக்களின் குறிப்பாகத் தாய்மார்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அந்த முயற்சி கைவிடப் பட்டதென்பதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் தற்போது பணிபுரிந்துவரும் ஊழியர்களுக்குத் தவறாமல் மாற்றுப் பணி வழங்குவதையும், பணித் தொடர்ச்சியைப் பாதுகாப்பதையும் அரசு உடனடியாகச் செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
"பீர் டூ ஒயின் வரை".. தேர்தலால் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க கட்டுப்பாடு! எத்தனை பாட்டில் வாங்கலாம்? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications