ஸ்ரீரங்கம் பிரசாரத்தில் 'கட்' அடித்துவிட்டு பள்ளிக்கூடம் சென்ற மு.க.ஸ்டாலின்!
ஸ்ரீரங்கம்:இடைத்தேர்தல் பரபரப்புகளுக்கிடையே பள்ளி குழந்தைகளோடு முக ஸ்டாலின் கலந்துரையாடினார்
ஸ்ரீரங்கம் சட்டசபை இடைத் தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளார், திமுக பொருளாளர் ஸ்டாலின். தனது பிரசாரத்திற்கிடையே பிரசார வாகனத்தில் இருந்து சிறுகமணி என்றப் பகுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

அப்போது அங்குள்ள பள்ளிக்கூடத்திற்கு திடீரென சென்ற அவர் அங்கிருந்த மாணவர்களுடன் உரையாடினார். மாணவர்களிடம் பாடங்கள் குறித்தும்,அவர்கள் எதிர்கால கல்வி திட்டங்கள் குறித்தும் பேசிய அவர், பின்னர் அவர்களது எதிர்காலம் சிறக்க வாழ்த்தினார்.ஸ்டாலினின் திடீர் வருகை அப்பள்ளி மாணவர்களை மகிழ்ச்சியில் திகைக்க வைத்தது.

'நாட்டின் வருங்கால தூண்களாக திகழும் இளைய தலைமுறையினரின் எண்ணங்களைத் தெரிந்து கொண்டு அவர்களின் ஆலோசனைகளையும் ஆட்சி செய்யும் போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை, எனவேதான் நான் பள்ளிக்கு சென்று கலந்துரையாடினேன்' என்று தன்னோடு வந்த கட்சி பிரமுகர்களிடம் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications