தமிழகத்தில் கன்னடர்கள் தாக்கப்பட்டதாக கூறுவதா... சதானந்த கெளடாவுக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை: தமிழ்நாட்டில் கன்னடர் மீது வன்முறை நடந்ததாக கூறிய மத்திய அமைச்சர் சதானந்தா கவுடாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா அளித்த பேட்டியில், "கர்நாடகத்தைச் சேர்ந்த எவரும் வன்முறையில் ஈடுபடவில்லை; மாறாக தமிழ் நாட்டில்தான் கன்னடர் மீது திட்டமிட்டு வன்முறை கட்ட விழ்த்து விடப்பட்டது. அதனால் ஆத்திர மடைந்த கன்னடர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்" என்று சொல்லியிருக்கிறாரே?

கர்நாடக மானாலும், தமிழ்நாடு ஆனாலும் இதுபோன்ற வன்முறைகள் நடைபெறக் கூடாது என்று தடுக்க வேண்டியவர், சொந்த மாநில அரசியல் காரணங்களுக்காக ஒருதலைப்பட்சமாகக் கருத்து தெரிவிப்பதற்கு எனது கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
கடுமையான கண்டனத்திற்குரிய பேட்டி இது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் முயற்சி இது. மத்தியில் அமைச்சர்களாக இருப்பவர்கள் இதுபோன்ற மாநிலங்களுக்கிடையே ஆன பிரச்சினைகளில் ஒருசார்பான நிலை எடுத்து கருத்துக் கூறுவது அவர்கள் வகிக்கும் பதவிக்கு அழகல்ல;
மேலும் அரசியல் சட்டத்தின்படி எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கும் எதிரானது. இன்னும் சொல்லப்போனால் சதானந்த கவுடா சட்டத் துறை அமைச்சராகவே ஏற்கனவே இருந்தவர். கர்நாடகத்தில்தான் முதன் முதலாக சந்தோஷ் என்ற இளைஞரைத் தாக்கிய சம்பவம் நடைபெற்றது. இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications