நாடாளுமன்ற தேர்தல்: கருணாநிதி இன்று பிரசாரத்தை துவங்குகிறார்!
சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி, இன்று மாலை சென்னை சேப்பாக்கத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று (புதன்கிழமை) தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

வடசென்னை வேட்பாளர் கிரிராஜன், மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன், தென்சென்னை வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரை ஆதரித்து மாலை 5 மணிக்கு சேப்பாக்கம் நெடுஞ்செழியன் நகரில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
90 வயதாகும் கருணாநிதி தனது தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 5 முதல் தொடங்குவார் என்று கூறப்பட்டது. தற்போது அது மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
அதன் பிறகு, ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் தொகுதி வாரியாக 12 நாள்கள் சாலை மார்க்கமாக கருணாநிதி பிரசாரம் செய்ய உள்ளார்.












Click it and Unblock the Notifications