Exclusive: நாமே மோடியிடம் சரணடைந்துவிட்டால் என்ன.. சசிகலா கணவர் நடராஜன் மாஸ்டர் பிளான்
நடராஜனின் ராஜ தந்திரங்கள் மோடியிடம் எடுபடுமா அல்லது, மோடி ஏற்கனவே வகுத்த வியூகத்தில் காய்களை நகர்த்துவாரா என்பது அவர் நடராஜனை சந்திப்பாரா இல்லையா என்பதை வைத்து அறிய முடியும்.
சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க சசிகலா கணவர் எம்.நடராஜன் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் அரசியல் களத்தை நிர்ணயித்தவர் நடராஜன் என்ற பேச்சு உண்டு. ஆனால் இப்போது வாய்ப்பு தனது மனைவியான சசிகலாவை தேடி வந்தபோது முழுமையாக பயன்படுத்த முடியாமல் உடல்நலக்குறைவு சதி செய்துவிட்டது என்ற ஆதங்கத்தில் உள்ளாராம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக்குள்ளாகி பெங்களூர் சிறையில் சசிகலா இருக்கிறார். இப்போது நடராஜன் தனது நாட்டியத்தை ஆடியிருக்க முடியும். ஆனால் அதில்தான் சிக்கல்.
சந்திக்க மறுப்பு
இந்த நேரத்தில் உடல்ரீதியாக பலவீனப்பட்டுவிட்டோமே என்ற ஆதங்கத்தில் நடராஜன் தவித்து வரும் நிலையில், சசிகலாவை சந்தித்து ஆலோசிக்க அவர் முயற்சித்த போதும் அவரை சந்திக்க மறுத்தே வருகிறாராம் சசிகலா.
மோடியுடன் சந்திப்பு
இந்த நிலையில், சசிகலாவின் மறு சீராய்வு மனு சார்பாக மோடியை சந்தித்து சில உதவிகள் கேட்பதற்காக முயற்சி எடுத்துள்ளார் நடராஜன். இதற்காக பிரதமரின் அப்பாயின்ட்மென்ட் கேட்டு கடிதம் தந்திருக்கிறார்.
பாஸ்வானை பிடித்த நடராஜன்
ஆனால் மோடி அலுவலகத்திலிருந்து நோ ரெஸ்பான்ஸ். இந்தநிலையில், வேறு ஒரு சோர்ஸ் மூலம் ராம்விலாஸ்பஸ்வானை பிடித்துள்ளார் நடராஜன். தற்போது, பஸ்வான், நடராஜனுக்கு உதவ பிரதமர் அலுவலகத்தில் முயற்சிக்கிறாராம்.
எடுபடுமா
நடராஜனின் ராஜ தந்திரங்கள் மோடியிடம் எடுபடுமா அல்லது, மோடி ஏற்கனவே வகுத்த வியூகத்தில் காய்களை நகர்த்துவாரா என்பது அவர் நடராஜனை சந்திப்பாரா இல்லையா என்பதை வைத்து அறிய முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.