சசிகலா கணவர் நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடம்.. குளோபல் மருத்துவமனை மீண்டும் அறிக்கை
சசிகலாவின் கணவர் நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக குளோபல் மருத்துவமனை மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Recommended Video
சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என குளோபல் மருத்துவமனை மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சசிகலாவின் கணவர் ம நடராஜன் கடந்த சனிக்கிழமை இரவு நெஞ்சுவலி காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.
இந்நிலையில் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடராஜனை பல்வேறு அரசியல் கட்சியினரும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ம.நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ம.நடராஜனுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்றும் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட நடராஜனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது என்றும் குளோபல் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.