சிறைவைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் வருவார்கள்- மாஃபா பாண்டியராஜன்
விடுதிகள், பண்ணை வீடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து எம்எல்ஏக்களும் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையை ஏற்று வருவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஓபிஎஸ் தலைமையை நாடி வந்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். விடுதிகள், பண்ணை வீடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து எம்எல்ஏக்களும் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையை ஏற்று வருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்துள்ளது. நாளுக்கு நாள் ஓபிஎஸ் பக்கம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுநாள்வரை எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் வந்தனர். தொடர்ந்து ராஜ்யசபா உறுப்பினர்கள், லோக்சபா உறுப்பினர்கள் வந்து ஆதரவை தெரிவித்தனர். இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

மாஃபா பாண்டியராஜன் மிகப்பெரிய ரோஜா பூங்கொத்து கொடுத்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதற்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு தெரிவித்தார்.
தொண்டர்கள் மத்தியில் பேசிய மாஃபா பாண்டியராஜன், வாக்காளர்களிடம் வாக்கு கேட்க நிற்கும் போது அனைவரும் விரும்புவது ஜெயலலிதா விரும்பிய ஒற்றுமையைத்தான். அந்த ஒற்றுமை காக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்தேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், நான் மட்டுமல்ல, தொடர்ந்து சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களும், அனைத்து அமைச்சர்களும் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையை ஏற்று வருவார்கள் என்று கூறினார்.
அதிமுக என்னும் எஃகு கோட்டையில் என்றைக்கும் பிளவு ஏற்படாது என்று கூறிய அவர், கட்சியை பிளக்க வேண்டும் என்ற திமுகவின் கனவு நனவாகப் போவதில்லை என்றார்.
மாஃபா பாண்டியராஜனை வரவேற்று பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாம் நடத்தும் தர்மயுத்தத்திற்கு வலுசேர்க்க வந்து இணைந்துள்ளார் மாஃபா பாண்டியராஜன் என்று கூறினார். இது இளைஞர்களின், மாணவர்களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது. இன்னும் அங்கிருந்து அனைத்து எம்எல்ஏக்களும் ஒன்றாக இணைந்து நம் பக்கம் வருவார்கள் என்றார். இதற்கு அச்சாரம் சேர்க்கும் வகையில் உள்ளது.
அம்மாவின் ஆன்மா தான் நம்மை இயக்குகிறது. மக்கள் புரட்சியை உருவாக்கியுள்ளது. அந்த புரட்சிக்கு வித்திடும் வகையில் வந்து இணைந்த அனைவரைக்கும் கோடான கோடி நன்றி என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications