பணம் என்னாச்சு... வாழைப்பழ காமெடியாகும் மதன் விவகாரம்!
எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி வேந்தர் மூவீஸ் மதன் 84 கோடி வசூலித்தார். அந்தப் பணத்துடன் தலைமறைவாகிவிட்டார் என்பதுதான் முக்கிய குற்றச்சாட்டு.
இந்தக் குற்றச்சாட்டுக்கு, தான் தலைமறைவாகும் முன்பே கடிதம் எழுதிவைத்துவிட்டுத்தான் சென்றார் மதன்.
இந்த 84 கோடி ரூபாயும் பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து கையில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. என்னிடம் நயா பைசா இல்லை.. இருப்பதெல்லாம் சினிமா உலகில் ரூ 50 கோடி கடன்கள்தான். வேண்டுமானால் நீங்களே முழுவதுமாக தோண்டித் துருவிப் பாருங்கள், நான் முழு ஒத்துழைப்புத் தருகிறேன் என்கிறாராம் மதன்.
இன்னொரு பக்கம், பச்சமுத்து கைதான ஒரே நாளில் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் ரூ 75 கோடியை ஒரே பேமெண்டாகக் கொடுத்துவிட்டு, பச்சமுத்துவை ஜாமீனில் அழைத்துச் சென்றுவிட்டார் அவர் மகன்.
இதைச் சுட்டிக் காட்டும் மதன், நான் கொடுத்த பணத்தைத்தான் நீதிமன்றத்தில் செலுத்தியிருக்கிறார்கள். எனவே என்னிடம் பணம் கேட்காதீர்கள், என்று கூறியதைக் கேள்விப்பட்டு, அதிர்ந்துவிட்டதாம் எஸ்ஆர்எம் தரப்பு.
தன்னை போலீஸ் கஸ்டடியில் எடுத்துக் கேட்கும்போதும் இதே பதிலைத்தான் சொல்ல முடிவெடுத்துள்ளாராம் மதன்.
மாணவர்கள் கொடுத்த பணம் எங்கே...? அதாங்க இந்தப் பணம்! என்கிற பாணியில்தான் இந்த வழக்கு விசாரணை போகப்போகிறது என்கிறார்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சில போலீசார்.
Vendhar Movies Madhan says in police interrogation that he hasn't swindled any money from students and handed over all cash Rs 84 cr to SRM Pachamuthu.